TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Industry

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Industry குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

27 ஜூலை, 2026PR #452

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

15 ஜூலை, 2026PR #403

Bharat Tex 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பு - தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்

புதுதில்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டின் அரங்குகளைப் பார்வையிட்டனர். மேலும், தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

9 ஜூலை, 2026PR #366

திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

18 மே, 2026

ரெனால்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இன்று (18.5.2026) தலைமைச் செயலகத்தில், ரெனால்ட் குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

18 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் (Madras Chamber of Commerce & Industries – MCCI) ஒரு சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர், வணிகச் செயல்முறைகளை எளிதாக்குவது மற்றும் மாநிலத்தில் தொழில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க MCCI உயர்மட்டக் குழுவினரை சந்தித்தார்.

18 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துப் பேசினார்கள்.