#Literature
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Literature குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
எழுத்தாளர் திரு. பூமணி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
கவிஞர் புவியரசு அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கவிஞரும், எழுத்தாளருமான திரு. புவியரசு அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என அறிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு நிதியுதவி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த இலக்கிய படைப்புகளை எழுதிய 11 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1,00,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், இன்று (24.6.2026) சென்னை, தியாகராய நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.