#Registration Department
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Registration Department குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) - சந்தேகங்களைத் தீர்க்கும் தினசரி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் - தொடர்பாக
தமிழ்நாடு பதிவுத்துறை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப்பிரிவுகளின் முதல் விற்பனைக்கு 17.08.2026 முதல் கட்டாயமாக "வருகையில்லா ஆவணப்பதிவு" திட்டத்தை செயல்படுத்துகிறது. இது தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க கட்டடவிற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக தினசரி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவு
மாண்புமிகு அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் சேவை மேம்பாடு மற்றும் வருவாய் இலக்குகளை அடையவும் அறிவுறுத்தப்பட்டது.
பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) ஆவணப்பதிவு கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு
பதிவுத்துறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை இணையவழியே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்ய 'வருகை இல்லா ஆவணப்பதிவு' முறை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த. லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப் பதிவுகளுக்காக பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.