TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Remembrance Day

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Remembrance Day குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

11 செப்., 2026PR #644

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காக அவர் ஆற்றிய வாழ்நாள் அர்ப்பணிப்பையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்ததையும் முதலமைச்சர் பாராட்டினார்.

20 ஆக., 2026PR #558

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

3 ஆக., 2026PR #485

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, இன்று (03.8.2026) சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. எஸ்.ராஜேஷ்குமார், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

3 ஆக., 2026PR #484

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி அஞ்சலி செலுத்தினார்.