வேளாண்மை - உழவர் நலத்துறை
தமிழ்நாட்டில் விவசாய மானியங்கள், பயிர் காப்பீடு, வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் உழவர் நலத்திட்டங்கள்.
2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது
2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் தலைமையில் சென்னையில் மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் ர. வினோத் 'கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் "கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் மாநில அளவிலான நிபுணர் குழு (SLEC) காணொலி வாயிலாக விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜுலை 31ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர. வினோத் அவர்கள் வேண்டுகோள்.
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்க, 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களுக்கு ஜூலை 31, 2026-க்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளார்.
நேரடி நெல் கொள்முதல், நெல் இயக்கம் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
இன்று (24.06.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்கள் தலைமையில் நேரடி நெல் கொள்முதல், நெல் இயக்கம் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள், 05.06.2026 அன்று, நடப்பு 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதித்தார்.
இரங்கல் செய்தி
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் ஆழத்தினை அதிகப்படுத்தும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு நரசிங்க பேட்டை கிராமத்தை சார்ந்த திரு.ரா.பாலு அவர்கள் உயிரிழந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்
உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.
புதுதில்லியில் காரீஃப் முகாம் 2026, தேசிய வேளாண் மாநாட்டில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர். வினோத் அவர்கள் ஆற்றிய உரை
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வேளாண் மாநாடு - காரீஃப் முகாம் 2026-இல், தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர். வினோத் அவர்கள் உரையாற்றி, மத்திய அரசிடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
தேசிய காரீஃப் சாகுபடிப் பரப்பு விரிவாக்கக் கருத்தரங்கம் – 2026 மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.வினோத் அவர்களின் உரை
தமிழ்நாட்டின் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.வினோத், 2026 காரீஃப் சாகுபடிப் பரப்பு விரிவாக்கத்திற்கான தேசிய கருத்தரங்கில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். விதை மானியங்கள், பண்ணை இயந்திரமயமாக்கலுக்கான நிதி, உர விலைக் கட்டுப்பாடு மற்றும் ஒரு துளி ஒரு பயிர் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசின் ஆதரவைக் கோரினார்.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர. வினோத் அவர்கள், அமைச்சராக பதவியேற்ற மறுநாளே வேளாண்மை இயக்குநரகத்திற்கு வருகை தந்து, துறை அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்கள் குறிப்பாக யூரியா மற்றும் டிஏபி போன்றவற்றை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான யூரியா மற்றும் டிஏபி உரங்களை தங்கு தடையின்றி வழங்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். உர உற்பத்தியாளர்களிடமிருந்து ஏற்பட்ட பற்றாக்குறையே இதற்குக் காரணம்.