சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
வன பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை திட்டங்கள், மாசு கட்டுப்பாடு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தகவல்கள்.
தமிழ்நாடு ஒத்திசைக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு 2025–2026
தமிழ்நாடு வனத்துறை 2025-2026 ஆம் ஆண்டில் மாநிலம் தழுவிய ஒத்திசைக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்புகளை (ஈரநிலம் மற்றும் நிலப்பரப்பு) நடத்தி, பறவைகளின் பன்முகத்தன்மையைக் கண்காணித்து, மாநிலத்தின் வாழ்விடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. இந்தக் கணக்கெடுப்பு அறிக்கைகள் 2026 உலக சுற்றுச்சூழல் தினத்தில் வெளியிடப்பட்டன.
வனப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
இன்று (27.05.2026) கிண்டியில் உள்ள வனத்துறை தலைமையகத்தில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் தலைமையில், வனப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் தலைமையில் 25.05.2026 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கிண்டி தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய பிரச்சனைகள், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.