நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
மாநகராட்சி செய்திகள், குடிநீர் திட்டங்கள் (TWAD), ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி செய்திகள்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடீநீர் வழங்கல் துறை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1035.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்துடன் 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் நெம்மேலி மற்றும் பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், நெம்மேலியில் இயங்கிவரும் 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ₹5814.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் மற்றும் மாண்புமிகு ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு.சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கையெழுத்தானது.