பொதுத்துறை
முதலமைச்சர் அலுவலக அறிவிப்புகள், நெறிமுறைகள் மற்றும் முக்கிய நிர்வாக உத்தரவுகள்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் 'செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்' பயிற்சித் திட்டம்
சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) சார்பில், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்' என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சித் திட்டம் 2026 ஜூன் 23 முதல் 25 வரை நடைபெறுகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் செயற்கை நுண்ணறிவின் பங்கை மையமாக வைத்து இந்தப் பயிற்சி நடைபெறும்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சிக்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நிர்வாக காரணங்களுக்காக 21.06.2026 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிட திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்க அரசாணை
சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை விரைவாகவும், எளிமையாகவும் பெறுவதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கே (CMDA) அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம், தேர்போகி கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி
இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியின்போது வாகன விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கலையும், முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.
"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.48 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோக நிலை குறித்த விளக்கம்
ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது குறைக்கப்பட்டதாகவோ வெளியான ஊடகச் செய்திகளை ஆவின் மறுக்கிறது, நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கிரீன் மேஜிக் பால் உட்பட அனைத்து பால் வகைகளும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நடந்த வாகன விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகள் பற்றிய உரை.
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்"; பங்குகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, ஜூன் 26 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6 கி.மீட்டர் தூரம் நடைபெறும் 'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க 11.06.2026 முதல் 22.06.2026 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினச் செய்தி
உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமான ஜூன் 12-ஐ முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்குக் கல்வியையும், மகிழ்ச்சியான வாழ்வையும் வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.