பொதுத்துறை
முதலமைச்சர் அலுவலக அறிவிப்புகள், நெறிமுறைகள் மற்றும் முக்கிய நிர்வாக உத்தரவுகள்.
செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திரு. பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற திரு. பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் 12-வது தேசிய கைத்தறி நாள் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 12-வது தேசிய கைத்தறி நாள் அன்று கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நெசவாளர்களின் நலனுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைக்கிறார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இன்று (6.8.2026) இலங்கைக் கடற்படையினர், மீனவர்களையும் அவர்களின் விசைப்படகையும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் குறித்து மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இக்கடிதத்தை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இச்சம்பவத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக அப்படகு நெடுந்தீவு கரையை ஒட்டித் தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் (IMBL) தாண்டியதாகக் கூறி, அப்படகையும் அதில் இருந்த மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு
ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்
கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றிற்கு உத்திரவிட வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த அமைச்சர்கள் திரு. நெ. மரிய வில்சன் மற்றும் திரு. ர. வினோத் ஆகியோரைப் பாராட்டி முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் மற்றும் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் - 2026ல் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் திரு. ராஜா முத்துப்பாண்டி, திரு. பிரவீன் சித்திரவேல் மற்றும் திரு. செல்வ பிரபு ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.80 இலட்சத்திற்கான காசோலைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களான ராஜா முத்துப்பாண்டி, பிரவீன் சித்திரவேல் மற்றும் செல்வ பிரபு ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ரூ.80 இலட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு தினங்கள் eKYC சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் கீழ் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு தினங்கள் சிறப்பு eKYC முகாம்கள் நடைபெறவுள்ளன.
எல்-நினோ தாக்கங்கள் குறித்து கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தமிழ்நாடு அரசு நிபுணர் குழு அமைத்தது
எல்-நினோ தாக்கங்களைக் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழையில் பற்றாக்குறை மற்றும் நீர்நிலைகளில் குறைந்த நீர் இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பான குடிநீர் மற்றும் கால்நடை பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் “உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குங்கள்” பயிற்சித் திட்டம்
சென்னை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) 'உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குங்கள்' என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இது பங்கேற்பாளர்களுக்கு நடைமுறைத் திறன்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை உருவாக்குதல், சேனலை மேம்படுத்துதல், பார்வையாளர்களை வளர்ப்பது மற்றும் பணமாக்குதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கும்.
மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.