கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர மக்கள் நலன், சுற்றுலா மற்றும் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகள்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகள் பற்றிய உரை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
விதிமீறல்கள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட கல்குவாரிகளின் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கை மற்றும் சட்ட விரோத கல்குவாரி மற்றும் அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்லுதல் போன்றவை நடைபெறாதவண்ணம் தடுக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்த ஆய்வு.
தமிழக அரசு சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது; இயற்கை வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலும் 88 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டப் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து 01.06.2026 முதல் 28.02.2027 வரை தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது.
கல்குவாரிகளில் விதிமீறல்: 67 தற்காலிக நிறுத்தம், 469 வாகனங்கள் பறிமுதல், சட்டவிரோத சுரங்கம் கண்டறிந்து அரசு நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 78 இடங்களில் சட்டவிரோத கனிம சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.