TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட விவசாயம், சுற்றுலா மற்றும் மாவட்ட நிர்வாக அறிவிப்புகள்.

18 ஜூலை, 2026PR #421

தமிழ்நாடு நாள் விழா: மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது

ஜூலை 18, 2026 அன்று சென்னை, தரமணியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

14 ஜூலை, 2026PR #391

தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 20 கோரிக்கை மனுக்களை அளித்தார்

தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.விஜய் பாலாஜி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களை சந்தித்து, மாநிலத்தின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை மேம்பாட்டிற்கான 20 விரிவான கோரிக்கைகளை சமர்ப்பித்தார். இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

29 ஜூன், 2026PR #309

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்:

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உரையாற்றினார், வெளிப்படையான, நேர்மையான, இலஞ்ச லாவண்யமற்ற நிர்வாகம், உடனடி மக்கள் சேவை, பாரபட்சமற்ற சட்டம் ஒழுங்கு, அடிப்படை வசதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வலியுறுத்தினார்.

15 ஜூன், 2026PR #226

"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.48 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

5 ஜூன், 2026PR #176

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.