தமிழ்நாடு நாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பெறுகின்றன.
விரிவான சுருக்கம்
மெட்ராஸ் மாகாணம் என இருந்த நிலப்பரப்பிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பெற்ற அந்தப் பொன்னான வரலாற்றை, நம் இளைய தலைமுறை நெஞ்சங்களில் ஆழப் பதிக்க வேண்டும். மொழியால் ஒன்றுபட்ட அந்த வீர வரலாற்றை, நம் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும், தமிழ் உணர்வைச் சுமக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் விருப்பமாகும். அதற்காகத்தான், 'தமிழ்நாடு நாள்' விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பெறுகின்றன. இது வெறும் போட்டி மட்டுமல்ல; நம் தமிழ் மொழியின் பெருமையுடன், நம் தமிழ்நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றும் பெருவிழா! மாணவச் செல்வங்கள் அலைகடலென திரண்டு இந்தப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்கொணர வேண்டுகிறேன். சென்னை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 14.07.2026 செவ்வாய்க் கிழமை அன்று காலை 9.00 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகைப் பதிவேட்டையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பெறுகிறது. தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும் "நான் விரும்பும் தமிழ்நாடு", "அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு", "இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு", "கல்வியில் சிறந்த தமிழ்நாடு", "வீரம் செறிந்த தமிழ்நாடு" ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாணவ / மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக்கடிதம் பெற்றுவர வேண்டும். போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவ/ மாணவியர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்.
முக்கிய அறிவிப்புகள்
- 16 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு நாள் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள்.
- 2இளம் தலைமுறையினரிடம் தமிழ் உணர்வையும், தமிழ்நாட்டின் வரலாற்றையும் பதிய வைக்கும் நோக்கம்.
- 3சென்னை மாவட்டத்தில் போட்டிகள் 14.07.2026 அன்று சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.
- 4போட்டிகளில் பங்கேற்க பள்ளித் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக்கடிதம் தேவை.
- 5முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள்.