#Agriculture
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Agriculture குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தாமிரபரணி நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 36,521 ஏக்கர் நிலங்கள் கார் பருவ சாகுபடிக்கு பயனடைய பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து 121 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள், 05.06.2026 அன்று, நடப்பு 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதித்தார்.
"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்
உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள 4 கால்வாய்களின் கீழுள்ள 10265 ஏக்கர் நேரடி பாசனப்பரப்பு நிலங்களுக்கு, கார் பருவ சாகுபடிக்கு 01.06.2026 முதல் 02.10.2026 வரை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டப் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து 01.06.2026 முதல் 28.02.2027 வரை தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது.
புதுதில்லியில் காரீஃப் முகாம் 2026, தேசிய வேளாண் மாநாட்டில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர். வினோத் அவர்கள் ஆற்றிய உரை
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வேளாண் மாநாடு - காரீஃப் முகாம் 2026-இல், தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர். வினோத் அவர்கள் உரையாற்றி, மத்திய அரசிடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
தேசிய காரீஃப் சாகுபடிப் பரப்பு விரிவாக்கக் கருத்தரங்கம் – 2026 மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.வினோத் அவர்களின் உரை
தமிழ்நாட்டின் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.வினோத், 2026 காரீஃப் சாகுபடிப் பரப்பு விரிவாக்கத்திற்கான தேசிய கருத்தரங்கில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். விதை மானியங்கள், பண்ணை இயந்திரமயமாக்கலுக்கான நிதி, உர விலைக் கட்டுப்பாடு மற்றும் ஒரு துளி ஒரு பயிர் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசின் ஆதரவைக் கோரினார்.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியையும், மற்ற பிரிவினருக்கு தரம் பிரிக்கப்பட்ட தள்ளுபடியையும் அறிவித்துள்ளார்.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர. வினோத் அவர்கள், அமைச்சராக பதவியேற்ற மறுநாளே வேளாண்மை இயக்குநரகத்திற்கு வருகை தந்து, துறை அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
2026-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்கள் குறிப்பாக யூரியா மற்றும் டிஏபி போன்றவற்றை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான யூரியா மற்றும் டிஏபி உரங்களை தங்கு தடையின்றி வழங்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். உர உற்பத்தியாளர்களிடமிருந்து ஏற்பட்ட பற்றாக்குறையே இதற்குக் காரணம்.