TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Birth Anniversary

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Birth Anniversary குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

15 ஜூலை, 2026PR #400

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2026) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

14 ஜூலை, 2026PR #393

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல்

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் 150ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 15.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

11 ஜூலை, 2026PR #377

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர்கள் சென்னையில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

7 ஜூலை, 2026PR #345

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இரட்டைமலை சீனிவாசனின் சமூகப் பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் குறித்து அறிக்கை விவரிக்கிறது.

26 ஜூன், 2026PR #301

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 121-ஆவது பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 121வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அமைச்சர்கள் சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மாநிலத்தின் அடையாளத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.

25 ஜூன், 2026PR #288

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இன்று (25.6.2026) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

1 ஜூன், 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.6.2026) சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அஞ்சலை அம்மாளின் தியாக வாழ்க்கை, குறிப்பாக நீல் சிலை அகற்றும் போராட்டம், சட்டமறுப்பு மறியல் போராட்டம், தனிநபர் சத்தியாகிரக போராட்டம், அந்நியத்துணி புறக்கணிப்புப் போராட்டம், நெசவாளர்கள் போராட்டம் போன்றவற்றில் அவரது பங்கேற்பு, கடலூர் மாகாண சட்டமன்ற உறுப்பினராக அவரது தேர்வு, மற்றும் மகாத்மா காந்தியால் 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என அழைக்கப்பட்டது போன்றவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

20 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.