#Buses
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Buses குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக 250 புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார். இதில் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 120 புதிய பேருந்துகளும் அடங்கும்.
மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.