#Environment
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Environment குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று கடைபிடிக்கப்பட்டது
'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர் மற்றும் கோயம்பேட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொழிற்சாலைகளில் திடீர் கள ஆய்வு - மாசுக்கட்டுப்பாட்டு விதிமீறிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சாயம், சலவை, தோல் மற்றும் பிற தொழிற்சாலைகளில் திடீர் கள ஆய்வுகளை மேற்கொண்டு, மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய தொழிற்சாலைகள் மீது மின் இணைப்பு துண்டிப்பு, இடிப்பு மற்றும் மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நீர்நிலைப் புனரமைப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, பெருநிறுவனங்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்களிப்புடன் நீர்நிலைகளைப் புனரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை (அரசு ஆணை (நிலை) எண் 50-ன் கீழ்) இன்று (01.07.2026) வெளியிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல், கனிமவள திட்டப்பணிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கனிமவள அறக்கட்டளை நிதி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது
உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு, தமிழ்நாடு அரசு குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (Standard Operating Procedure SOP) வெளியிட்டுள்ளது. இது முறையான மற்றும் தர உறுதியுடன் கூடிய குளிர் கூரை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான தொழில்நுட்ப கட்டமைப்பாகும்.
தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை வெளியிடுகிறது
உலக சுற்றுச்சூழல் தினம் 2026 அன்று, தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அறிமுகப்படுத்தியது. இந்த SOP நகர்ப்புற வெப்பத்தை எதிர்த்துப் போராடவும், ஆற்றல் தேவையை குறைக்கவும், கட்டிடங்களில் வெப்ப ஆறுதலை மேம்படுத்தவும் குளிர் கூரை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்ப கட்டமைப்பை வழங்குகிறது.
தமிழ்நாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான மூன்றாவது ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்பு
தமிழ்நாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீலகிரி வரையாடு மக்கள் தொகை மதிப்பீட்டிற்கான மூன்றாவது ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் வரையாடுகளின் எண்ணிக்கை 1364 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 4.68% அதிகரிப்பாகும். இக்கணக்கெடுப்பு அறிக்கை உலக சுற்றுச்சூழல் தினத்தன்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025-2026
தமிழ்நாடு வனத்துறை, பறவைகளின் பன்முகத்தன்மையைக் கண்காணித்து, பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், 2023ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2025 டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பும், 2026 பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பும், வனத்துறை அதிகாரிகள், பறவை நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பறவை பார்வையாளர்களின் தீவிர பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
கல்குவாரிகளில் விதிமீறல்: 67 தற்காலிக நிறுத்தம், 469 வாகனங்கள் பறிமுதல், சட்டவிரோத சுரங்கம் கண்டறிந்து அரசு நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 78 இடங்களில் சட்டவிரோத கனிம சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.