TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Investment

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Investment குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

20 ஜூலை, 2026PR #426

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது, உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்வது மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதலமைச்சர், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தி, உற்பத்தியையும் விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.

15 ஜூலை, 2026PR #403

Bharat Tex 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பு - தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்

புதுதில்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டின் அரங்குகளைப் பார்வையிட்டனர். மேலும், தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

10 ஜூலை, 2026PR #373

தமிழ்நாடு அரசு ரூ.2000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் விற்பனையை அறிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு ஜூலை 14, 2026 அன்று இந்திய ரிசர்வ் வங்கி மூலம் ரூ.2000 கோடி மதிப்பிலான 8 ஆண்டு மற்றும் 15 ஆண்டு பத்திரங்களை ஏலம் விட உள்ளது.

9 ஜூலை, 2026PR #366

திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

7 ஜூலை, 2026PR #346

தமிழ்நாட்டில் ஹிட்டாச்சி எனர்ஜி விரிவாக்கத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: 1000 கோடி ரூபாய் முதலீடு, 1000 உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்

முதலமைச்சர் முன்னிலையில், 1000 கோடி ரூபாய் முதலீட்டில் ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 1000 உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

17 ஜூன், 2026PR #244

தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் IN-SPACe நிறுவனத்திற்கிடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இடையே தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் உருவாக்கப்படவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் "விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் (CTF)" அமைப்பதற்காக கையெழுத்திடப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

4 ஜூன், 2026PR #167

ரூ.18,600 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்களை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

18 மே, 2026

ரெனால்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இன்று (18.5.2026) தலைமைச் செயலகத்தில், ரெனால்ட் குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

18 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் (Madras Chamber of Commerce & Industries – MCCI) ஒரு சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர், வணிகச் செயல்முறைகளை எளிதாக்குவது மற்றும் மாநிலத்தில் தொழில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க MCCI உயர்மட்டக் குழுவினரை சந்தித்தார்.

18 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துப் பேசினார்கள்.