TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

தலைப்பு வாரியான தொகுப்பு

சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு

அரசு மருத்துவமனைகள், தடுப்பூசி முகாம்கள், காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொது சுகாதார வழிகாட்டுதல்கள்.

8 ஜூன், 2026PR #193

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

29 மே, 2026

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் கோடம்பாக்கம் 132ஆவது வார்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள், சென்னை கோடம்பாக்கம் 132ஆவது வார்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த பொதுமக்கள் புகார்களைத் தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

24 மே, 2026

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (24.05.2026) காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு திட்டம் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

21 மே, 2026

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

21.05.2026 அன்று மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் தலைமையில் மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குதல், 'காயகல்ப்' சான்றிதழ் ஆய்வுகளை விரைவுபடுத்துதல், நிலுவையிலுள்ள 8000 தனியார் மருத்துவமனை CEA உரிமங்களை வழங்குதல் மற்றும் கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணையை விரைந்து முடித்தல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

20 மே, 2026

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கித் தொடங்கி வைத்தார்.