TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

மின்சாரத்துறை

மின் உற்பத்தி, டான்ஜெட்கோ (TANGEDCO) மின்சார தகவல்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரியசக்தி திட்டங்கள்.

10 ஜூன், 2026PR #208

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

6 ஜூன், 2026PR #187

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கழிவுநீர் வெளியேற்று திட்டங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

29 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரி பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

27 மே, 2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இடிமின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலை வழங்கினார்

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இடிமின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் காசோலைகளை வழங்கினார்.

25 மே, 2026

கடந்த ஆட்சியில் தனிநபர்/ ஒரு நிறுவனத்திற்கு மட்டும் மின் வாரிய முக்கிய பணிகள் - ஒப்பந்தாரர்கள் புகார். இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பணிகள் வழங்கப்படும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் உறுதி.

இன்று (25.05.2026) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

24 மே, 2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை கணினிமயமாக்க மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார்

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (24.05.2026) புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க உத்தரவிட்டதோடு, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கவும், கைதிகளுக்கான in-house bazaar அமைக்கவும் அறிவுறுத்தினார்.

18 மே, 2026

முதலமைச்சர் எரிசக்தித் துறை செயல்பாடுகள் மற்றும் எதிர்காலக் கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்தார்

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் எரிசக்தித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் செயல்பாடுகள், எதிர்காலக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் போன்ற முக்கிய நலத்திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.