சென்னை மாவட்டம்
மாநிலத் தலைநகரான சென்னையின் மாநகராட்சி அறிவிப்புகள், கொள்கை அமலாக்கங்கள் மற்றும் குடிமை அறிவிப்புகள் உள்ளிட்ட சமீபத்திய தகவல்கள்.
ஓமன் நாட்டில் உற்பத்தி, இறுதி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் தேவை
ஓமன் நாட்டில் உற்பத்தி, இறுதி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாத ஊதியம் ரூ.44,000/- முதல் ரூ.54,000/- வரை வழங்கப்படும்.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் “தொழில்முனைவோர்களுக்கான ChatGPT ஒரு நாள் பயிற்சிப் பட்டறை”
சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), தொழில்முனைவோர்களுக்கான 'ChatGPT' ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை 2026 ஜூன் 30 அன்று அதன் சென்னை வளாகத்தில் நடத்துகிறது.
மயிலாப்பூரில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ப.வெங்கடரமணன் தொடங்கி வைத்தார்
24.06.2026 அன்று மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு நிதியுதவி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த இலக்கிய படைப்புகளை எழுதிய 11 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1,00,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இன்று (25.6.2026) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.127.21 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார்.
செய்தி வெளியீடு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - 3 நாட்கள் "ஊடக ஆளில்லா விமான இயக்கப் பயிற்சித் திட்டம்"
சென்னை, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) ஜூலை 6 முதல் 8, 2026 வரை 3 நாட்கள் "ஊடக ஆளில்லா விமான இயக்கப் பயிற்சித் திட்டத்தை" நடத்துகிறது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு.
பயன்படுத்த முடியாத காவல் துறை வாகனங்களின் பொது ஏலம்
பயன்படுத்த முடியாத காவல் துறை வாகனங்களுக்கான பொது ஏலம் ஜூலை 2, 2026 அன்று சென்னையில் நடைபெறும். பங்கேற்பாளர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தி ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், இன்று (24.6.2026) சென்னை, தியாகராய நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.