சென்னை மாவட்டம்
மாநிலத் தலைநகரான சென்னையின் மாநகராட்சி அறிவிப்புகள், கொள்கை அமலாக்கங்கள் மற்றும் குடிமை அறிவிப்புகள் உள்ளிட்ட சமீபத்திய தகவல்கள்.
செய்தி வெளியீடு: சட்டமன்றப் பேரவைச் செயலகம்
திரு. C.Ve. சண்முகம் ராஜினாமா செய்த வெற்றிடத்திற்கு, திரு. பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 60 திட்டப்பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 766.24 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன - மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தகவல்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 60 திட்டப்பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 766.24 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் 2,090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்ட 2,090 மாணவர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகின்ற 13.06.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் அரசு திட்டங்களின் முன்னேற்பு பணிகள் குறித்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா அவர்கள் ஆய்வு
மாண்புமிகு அமைச்சர் பெ. மதன் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், MSME திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட அதிக பயனாளிகளை அடையாளம் காணவும், மாற்றுத்திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும், அனைத்து இலக்குகளையும் டிசம்பருக்குள் அடையவும் அவர் வலியுறுத்தினார்.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், நகர் ஊரமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வரன்முறைப்படுத்துதல் குறித்த பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (09.06.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைக்கும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார்.
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் அவர்கள் பேரிடர் மேலாண்மை துறையின் 2026 மாநில வெப்ப செயல் திட்டத்திற்கான புத்தகத்தை வெளியிட்டார்.
தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி'
தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் பயிற்சி'யை வரும் 15.06.2026 முதல் 19.06.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்த உள்ளது.
5 நாட்கள் மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம்
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம் சென்னை, கிண்டியில் 2026 ஜூன் 15 முதல் 19 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), "மின்னணு வர்த்தகம் (இ-காமர்ஸ்) குறித்த பயிற்சி"
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன (MSME) உரிமையாளர்களுக்காக ஜூன் 16 முதல் 18, 2026 வரை சென்னையில் மின்னணு வர்த்தகம் மற்றும் நேரடி வாடிக்கையாளர் விற்பனை (D2C) மாதிரிகள் குறித்த மூன்று நாள் பயிற்சியை நடத்துகிறது.