TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government Schemes

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Schemes குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

10 செப்., 2026PR #636

மூன்று நாட்கள் “மசாலா மற்றும் இனிப்பு (ரெடி மிக்ஸ்) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சித் திட்டம்

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) ஆனது செப்டம்பர் 16-18, 2026 வரை அதன் சென்னை வளாகத்தில் “மசாலா மற்றும் இனிப்பு (ரெடி மிக்ஸ்) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்” குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

3 செப்., 2026PR #610

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களின் நேரடி சேர்க்கை

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி 07.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ITI படிப்பின் நன்மைகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் அரசு சலுகைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

19 ஆக., 2026

விதி 110-ன் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை குறித்த முதலமைச்சரின் அறிவிப்புகள்

முதலமைச்சர் சுகாதாரத் துறையில் பல புதிய முன்முயற்சிகள் மற்றும் மேம்பாடுகளை அறிவித்தார், இதில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை உயர்வு, புதிய மருத்துவ வசதிகள், மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிப்பு மற்றும் விரிவான புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் ஆகியவை அடங்கும்.

15 ஆக., 2026PR #545

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 அன்று நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

6 ஆக., 2026PR #507

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் 12-வது தேசிய கைத்தறி நாள் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 12-வது தேசிய கைத்தறி நாள் அன்று கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நெசவாளர்களின் நலனுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைக்கிறார்.

4 ஆக., 2026PR #489

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.113 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 113 கோடி ரூபாய் செலவில் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆத்தூர், மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிரியக்க சிகிச்சை மையம், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

30 ஜூலை, 2026PR #474

சென்னை பனகல் மாளிகையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சித் துறையின் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 'வெற்றித் தமிழகம்' திட்டச் செயலாக்கம், திட்டங்களை காலக்கெடுவிற்குள் தரமாக நிறைவேற்றுதல் மற்றும் வடகிழக்கு பருவமழைக்கான நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

15 ஜூலை, 2026PR #409

செய்தி வெளியீடு எண்: 409 - சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் வழங்கினார்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை வலியுறுத்தினார்.

8 ஜூலை, 2026PR #360

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கே. ஜெகதீஸ்வரி தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் "தோழி" பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

1 ஜூலை, 2026PR #319

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு

மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ப.ராஜ்குமார் அவர்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள், நடப்பு திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்முயற்சிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

16 ஜூன், 2026PR #239

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. Ν. ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டமன்றத் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

15 ஜூன், 2026PR #233

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.