TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்ட இரும்புத் தொழில், மாம்பழ சாகுபடி, போக்குவரத்து மற்றும் நிர்வாக செய்திக் குறிப்புகள்.

14 ஜூலை, 2026PR #392

புதுதில்லியில் நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு" விற்பனை நிலையத்தை பார்வையிட்ட தமிழ்நாடு அரசின் மாண்புமிகு அமைச்சர்கள்

புதுதில்லியில் ரூ.49.00 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு" விற்பனை நிலையத்தை தமிழ்நாடு அமைச்சர்கள் பார்வையிட்டு, மேம்பாட்டு வசதிகளை ஆய்வு செய்தனர்.

8 ஜூலை, 2026PR #359

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடீநீர் வழங்கல் துறை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1035.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்துடன் 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

29 ஜூன், 2026PR #308

B.E., Degree for Working Professionals Admission (Formerly Part Time B.E.,)

தமிழ்நாட்டில் உள்ள 6 அரசு மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், பணிபுரியும் வல்லுநர்களுக்கான பகுதி நேர B.E. பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22 ஜூன், 2026PR #266

சட்டப்படிப்பு சேர்க்கை 2026-2027: சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை நிறைவு, கட்-ஆஃப் மதிப்பெண்கள் வெளியீடு மற்றும் தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

31 மே, 2026

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தேர்த்திருவிழாவின்போது ஏற்பட்ட விபத்தில் திரு.ஹர்ஷவர்தன் என்பவர் உயிரிழந்தார். மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார், மேலும் காயமடைந்தவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

29 மே, 2026

கல்குவாரிகளில் விதிமீறல்: 67 தற்காலிக நிறுத்தம், 469 வாகனங்கள் பறிமுதல், சட்டவிரோத சுரங்கம் கண்டறிந்து அரசு நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 78 இடங்களில் சட்டவிரோத கனிம சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

26 மே, 2026

டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள்

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என நிர்வாகம் உறுதியளித்த நிலையில், பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

25 மே, 2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் பயன்பெற அழைப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கிறது.

21 மே, 2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி - செய்தி வெளியீடு

2025-26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மாணக்கர்களின் தேர்ச்சி விகிதம் 91.42 சதவீதமாகவும், இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். மேலும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 96.66 சதவீத தேர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகமாகும், இது மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதமான 94.31 சதவீதத்தினை காட்டிலும் அதிகமாகும்.

12 மே, 2026

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துகடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் பிரதான சாலைவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துகடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் பிரதான சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.