TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அரசு கொள்கை மற்றும் ஆய்வு

நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் இன்று (29.07.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்டங்கள்சென்னை
முக்கிய நபர்கள்S. Joseph Vijay, N. Anand

விரிவான சுருக்கம்

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் இன்று (29.07.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் 'வெற்றித் தமிழகம் (Vision Vetri Tamizhagam)' என்ற வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அந்த தொலைநோக்கு இலக்குகளை அடையும் வகையில், நீர்வளத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவியல் அடிப்படையிலும், காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை (Budget 2026 – 2027) அறிவிக்கப்படும் வகையில் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. நீர் என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி என்பதால், நீர் வளங்களை பாதுகாப்பது, மேம்படுத்துவது மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக நிலையான முறையில் பயன்படுத்துவது என்ற உயரிய நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பாக ஏரிகள், குளங்கள், அணைகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளில் தூர்வாரும் பணிகள், கரை பலப்படுத்தும் பணிகள் மற்றும் தேவையான பராமரிப்பு பணிகள் அனைத்தும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம் பருவமழை நீரை முழுமையாக சேமிப்பதோடு, வெள்ளப் பாதிப்புகளையும் கணிசமாகக் குறைப்பதே அரசின் நோக்கமாகும். அதேபோல், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு மற்றும் வெள்ளத் தணிப்பு பணிகள் அனைத்தும் எவ்வித தாமதமும் இன்றி விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில், நிரந்தர மற்றும் நீடித்த தீர்வுகளை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. விவசாயிகளின் நலன் அரசின் முதன்மை நோக்கமாகும். பாசன வசதிகளை மேம்படுத்தி, நீரின் ஒவ்வொரு துளியும் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதேவேளையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் குடிநீர் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் நீர்வளத்தைப் பாதுகாப்பதும், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப வலுப்படுத்துவதும், காலநிலை மாற்றத்தின் சவால்களை திறம்பட எதிர்கொள்வதும் இந்த அரசின் உறுதியான கொள்கையாகும். 'வெற்றித் தமிழகம்' என்ற தொலைநோக்கை நனவாக்கும் வகையில், நீர்வளத் துறை தொடர்ந்து புதுமையான, மக்கள் நலன் சார்ந்த மற்றும் நிலையான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இந்த அரசு உறுதிபூண்டு உள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். பின்வரும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்: 1. நீர்நிலைகளை முறையாக தூர்வார வேண்டும் 2. பெருநிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை முறையாகப் பயன்படுத்தி, நீர்நிலைகளையும், வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும். 3. அவர்களுக்கு தேவைப்படும் தடையின்மைச் சான்று உடனடியாக வழங்கப்படவேண்டும். 4. மேற்கண்ட பணிகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் புகார்களுக்கு இடமளிக்காத வகையிலும் செயல்படுத்த வேண்டும். 5. வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரி பராமரிக்க வேண்டும். இந்த ஆய்வில் நீர்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., அவர்கள், சிறப்பு செயலாளர் திரு.ஸ்ரீதரன் அவர்கள், முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள், அனைத்து தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    நீர்நிலைகளை முறையாக தூர்வார வேண்டும்.
  • 2
    பெருநிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை முறையாகப் பயன்படுத்தி, நீர்நிலைகளையும், வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
  • 3
    அவர்களுக்கு தேவைப்படும் தடையின்மைச் சான்று உடனடியாக வழங்கப்படவேண்டும்.
  • 4
    மேற்கண்ட பணிகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் புகார்களுக்கு இடமளிக்காத வகையிலும் செயல்படுத்த வேண்டும்.
  • 5
    வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரி பராமரிக்க வேண்டும்.

இது தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளுடன் தொடர்புடையது

அரசு செய்திக் குறிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளுடன் ஒப்பிடும் NammaMap Manifesto AI-ல் கண்காணிக்கப்படுகிறது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்