#Review Meeting
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Review Meeting குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையின்போது, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் இன்று (29.07.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ப.ராஜ்குமார் அவர்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள், நடப்பு திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்முயற்சிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
செய்தி வெளியீடு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் கைத்தறி துறையின் துணை / உதவி இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் இன்று 18.06.2026 கைத்தறி துறையின் ஆய்வுக் கூட்டம் கைத்தறி இயக்குநரக கூட்டரங்கில் நடைபெற்றது.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய புள்ளிவிவரங்கள், நலத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாளில் 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் – சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் விரிவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
நீர்வளத் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் 15.06.2026 அன்று நடைபெற்றது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் அரசு திட்டங்களின் முன்னேற்பு பணிகள் குறித்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா அவர்கள் ஆய்வு
மாண்புமிகு அமைச்சர் பெ. மதன் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், MSME திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட அதிக பயனாளிகளை அடையாளம் காணவும், மாற்றுத்திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும், அனைத்து இலக்குகளையும் டிசம்பருக்குள் அடையவும் அவர் வலியுறுத்தினார்.