#Inspection
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Inspection குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த. லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி சென்னை பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவுத் தரம் மற்றும் விநியோகத்தை திடீர் ஆய்வு செய்தார், மேலும் குழந்தைகள் நல மையங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, தரம், சுவை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தினார்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னையில் உள்ள அலுவலகங்களை ஆய்வு செய்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு உணவு ஆணைய அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆணையத்தின் செய்பாடுகளை துரிதப்படுத்துதல் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராம குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் விருதுநகர் மாவட்டம், புலியூரான் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் மாநகரப் போக்குவரத்து கழகம் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பை காணாமல் போனது மற்றும் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தாமல் சென்றது குறித்த இரண்டு பொதுமக்கள் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன், விழுப்புரம் பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு.
பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவு.
தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாகவும், பல இடங்களில் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் ப.ராஜ்குமார் இராயப்பேட்டையில் வணிக வளாக கட்டுமானத்தை ஆய்வு செய்தார்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை இராயப்பேட்டையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை 21.05.2026 அன்று ஆய்வு செய்தார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கலையரங்கம், கூட்டரங்கம், கருத்தரங்கம் மற்றும் செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள வசதிகளையும் நூலக உள்கட்டமைப்பையும் ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காவினை ஆய்வு மற்றும் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை அறிவிப்பு.
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் கோபாலபுரம், நுங்கம்பாக்கம் மற்றும் கில்நகர் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காவினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 'முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை' என்ற பெயரில் மூன்று நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.