#Minister
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை 27.07.2026 அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் (27.07.2026) திங்கட்கிழமை அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கவுள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.
அமைச்சர் செ. கமலி கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய மாணவியர் விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்காக புதிதாகக் கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடங்களை சென்னை, மாதவரத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.931.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதிகள், மாணவியர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கி கல்வி பயில அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளன.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் ஆய்வு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் பள்ளி வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி S. கமலி அவர்கள் ஆய்வு
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி S. கமலி அவர்கள் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, வசதிகளை பார்வையிட்டு, அலுவலர்களுடன் கலந்துரையாடினார். ஒரு குதிரை இறந்ததற்கான காரணம், கழிவு மேலாண்மை மற்றும் சிகிச்சை செலவுகள் குறித்து விசாரித்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகள், புகார் தீர்வு நடைமுறைகள் மற்றும் கிடங்குகள், அரிசி ஆலைகளில் CCTV கண்காணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த - மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப.ராஜ்குமார் அவர்கள் விரைவில் முடிக்க உத்தரவு
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் அவர்கள் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
அமைச்சர் ப.வெங்கடரமணன் மயிலாப்பூர் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு ஆய்வு செய்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொழிற்சாலைகளில் திடீர் கள ஆய்வு - மாசுக்கட்டுப்பாட்டு விதிமீறிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சாயம், சலவை, தோல் மற்றும் பிற தொழிற்சாலைகளில் திடீர் கள ஆய்வுகளை மேற்கொண்டு, மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய தொழிற்சாலைகள் மீது மின் இணைப்பு துண்டிப்பு, இடிப்பு மற்றும் மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னை அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு
மாண்புமிகு அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் சென்னை அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, உணவுத் தரம், சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்து, வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள "கூட்டுறவு வாரம்-2026"-ஐ மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (29.06.2026) கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (29.06.2026) சென்னை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் "கூட்டுறவு வாரம்-2026"-ஐ கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வருகின்ற 29.06.2026 முதல் 06.07.2026 வரை மாநிலம் முழுவதும் "கூட்டுறவு வாரம்" மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது.
மயிலாப்பூரில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ப.வெங்கடரமணன் தொடங்கி வைத்தார்
24.06.2026 அன்று மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் கைத்தறி துறையின் துணை / உதவி இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் இன்று 18.06.2026 கைத்தறி துறையின் ஆய்வுக் கூட்டம் கைத்தறி இயக்குநரக கூட்டரங்கில் நடைபெற்றது.