TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Sustainable Development

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sustainable Development குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

27 ஜூலை, 2026PR #452

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

19 ஜூன், 2026PR #259

தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்கலை உறுதி செய்து, திட்டங்களை விரைவுபடுத்தி மாநிலத்தின் பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திடும் வகையில் 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்

மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிர்வாக செயல்திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி, பசுமை ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த 5 புதிய மண்டலங்களை உருவாக்கியுள்ளது.

5 ஜூன், 2026

இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது

உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு, தமிழ்நாடு அரசு குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (Standard Operating Procedure SOP) வெளியிட்டுள்ளது. இது முறையான மற்றும் தர உறுதியுடன் கூடிய குளிர் கூரை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான தொழில்நுட்ப கட்டமைப்பாகும்.

4 ஜூன், 2026

இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.