#Tamil Nadu Government
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tamil Nadu Government குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
முதலமைச்சர் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவு
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 2026-27 ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்காக 120 நாட்களுக்கு மொத்தம் 1563 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9012 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் HRD Attestation மற்றும் Apostille சேவைகள்; பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL), மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோருக்கான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான HRD Attestation மற்றும் Apostille சேவைகளை வழங்குகிறது. நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக இச்சேவைகளைப் பெற பொதுமக்கள் நேரடியாக OMCL-ஐ அணுகி இடைத்தரகர்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்தார்
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பை வலுப்படுத்துதல், கொள்முதல் மற்றும் விநியோக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல்
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் 150ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 15.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-ll) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி மதிப்பிலான மருத்துவக் கட்டடங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையிலிருந்து 14.07.2026 முதல் 28.07.2026 வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
பிரபல பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இரங்கல் தெரிவிப்பு
பிரபல பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையிசை உலகில் தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் அவர்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர்கள் சென்னையில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
5 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 'திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி'
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி 20.07.2026 முதல் 24.07.2026 வரை நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட, 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) ஆகிய பதவிகளுக்கு 28.07.2026 அன்று மாலை 6.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடீநீர் வழங்கல் துறை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1035.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்துடன் 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு வணிகவரித் துறையில் வணிகர்களின் நலனுக்காக, மெய்நிகர் (Virtual) முறையில் நேர்காணல் மேற்கொள்ள வழிகாட்டி குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன், அவர்கள் தகவல்
தமிழ்நாடு வணிகவரித் துறையில் வணிகர்களின் நலனுக்காக மெய்நிகர் (Virtual) முறையில் நேர்காணல் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கணினி முறையின் மூலம் பணம் திருப்பிச் செலுத்தும் விண்ணப்பங்களை சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.