#Tamil Nadu
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tamil Nadu குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாளில் 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் – சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் விரிவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
7.84% தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன், 2026 திரும்பச் செலுத்துதல்
தமிழ்நாடு அரசு தனது 7.84% மாநில வளர்ச்சி கடன், 2026 ஐ ஜூலை 13, 2026 அன்று திரும்பச் செலுத்தும் என்றும், வட்டி ஜூலை 12, 2026 வரை செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகள் பற்றிய உரை.
செய்தி வெளியீடு: சட்டமன்றப் பேரவைச் செயலகம்
திரு. C.Ve. சண்முகம் ராஜினாமா செய்த வெற்றிடத்திற்கு, திரு. பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் 2,090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்ட 2,090 மாணவர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் அரசு திட்டங்களின் முன்னேற்பு பணிகள் குறித்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா அவர்கள் ஆய்வு
மாண்புமிகு அமைச்சர் பெ. மதன் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், MSME திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட அதிக பயனாளிகளை அடையாளம் காணவும், மாற்றுத்திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும், அனைத்து இலக்குகளையும் டிசம்பருக்குள் அடையவும் அவர் வலியுறுத்தினார்.
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் அவர்கள் பேரிடர் மேலாண்மை துறையின் 2026 மாநில வெப்ப செயல் திட்டத்திற்கான புத்தகத்தை வெளியிட்டார்.
செய்தி வெளியீடு - சட்டமன்றப் பேரவைச் செயலகம்
2026 ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரவின் சக்கரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டு, 12 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பட்டு வளர்ச்சி மற்றும் கைத்திறன் மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் பெ. மதன்ராஜா தலைமையில், பட்டு வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில்துறை மேம்பாடு மற்றும் நலன் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), "மின்னணு வர்த்தகம் (இ-காமர்ஸ்) குறித்த பயிற்சி"
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன (MSME) உரிமையாளர்களுக்காக ஜூன் 16 முதல் 18, 2026 வரை சென்னையில் மின்னணு வர்த்தகம் மற்றும் நேரடி வாடிக்கையாளர் விற்பனை (D2C) மாதிரிகள் குறித்த மூன்று நாள் பயிற்சியை நடத்துகிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவியும் உபகரணங்களும் வழங்கினார்
மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமாருக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பில் துப்பாக்கி சுடும் உபகரணங்களும் வழங்கினார். மேலும், ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒரு விளையாட்டு வீரருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.
பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) ஆவணப்பதிவு கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு
பதிவுத்துறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை இணையவழியே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்ய 'வருகை இல்லா ஆவணப்பதிவு' முறை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.