#Transparency
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Transparency குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தமிழ்நாட்டில் மனைப்பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்களுக்கு வருகையில்லா இணையவழி பதிவு கட்டாயமாக்கலை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களுக்கு வருகையில்லா இணையவழி பதிவு (Presenceless Registration) முறையை கட்டாயமாக்கி தொடங்கி வைத்தார். இது பதிவு நடைமுறைகளை எளிதாக்கி, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.
வருகையில்லா ஆவணப்பதிவு - சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம்
அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப் பிரிவுகளுக்கான "வருகையில்லா ஆவணப்பதிவு" குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் ஆகஸ்ட் 14, 2026 அன்று கோயம்புத்தூரில் கட்டட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக நடைபெற உள்ளது. இப்புதிய முறை ஆகஸ்ட் 17, 2026 முதல் முதல் விற்பனைக்கு கட்டாயமாக்கப்படுகிறது.
மாண்புமிகு அமைச்சர் ப. ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையவழி ஒதுக்கீட்டு தளத்தை துவக்கி வைத்தார்
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை துவக்கி வைத்தார். பல்வேறு திட்டங்களில் உள்ள 7,659 அலகுகள் குலுக்கல், முதலில் வருவோருக்கு முன்னுரிமை, பொது ஒதுக்கீடு முறைகளில் விற்பனைக்கு உள்ளன. மேலும், 884 வணிக அலகுகள் மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஆளிலி பதிவு – சந்தேகங்கள் மற்றும் கேள்விகளைத் தீர்க்கும் கூட்டம் மற்றும் செயல்விளக்க அமர்வு – குறித்து.
தமிழ்நாடு பதிவுத்துறை வெளிப்படைத்தன்மையையும் வசதியையும் மேம்படுத்த 'ஆளிலி பதிவு' முறையை அறிமுகப்படுத்துகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளின் விற்பனைக்கு முதலில் பொருந்தும் இந்த புதிய செயல்முறை குறித்த பங்குதாரர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், செயல்விளக்கம் அளிக்கவும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் (Public Grievance Portal) - தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்வு செய்யும் புதிய தளம் உருவாக்கப்பட்டது – தொடர்பாக
தணிக்கைத் துறை தொடர்பான பொதுமக்கள் மற்றும் தணிக்கை மேற்கொள்ளப்படும் நிறுவனங்களின் குறைகளை எளிதாக தீர்க்கவும், தேவையான விவரங்களை உடனுக்குடன் பெறவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், வசதிகளை அதிகரிக்கவும் CAMS வலைதளத்தின் ஒரு பகுதியாக புதிய பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்:
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உரையாற்றினார், வெளிப்படையான, நேர்மையான, இலஞ்ச லாவண்யமற்ற நிர்வாகம், உடனடி மக்கள் சேவை, பாரபட்சமற்ற சட்டம் ஒழுங்கு, அடிப்படை வசதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வலியுறுத்தினார்.
கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பெற பல்வேறு சங்கப் பிரதிநிதிகளோடு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் கனிம கடத்தலைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) வழங்கப்பட்டதால் மின்வாரிய பொறியாளர்கள் மகிழ்ச்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்களாக (மின்னியல்) பணியில் சேர்ந்தவர்களுக்கு, முதற்கட்டமாக 300 செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை மின்வாரிய பொறியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வுக்கூட்டம்: மக்கள் நலன் மற்றும் திறமையான சேவை வழங்கலை அமைச்சர் திருமதி.செ.கமலி வலியுறுத்தினார்
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், துறையின் தற்போதைய செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் சேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. கால்நடை மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு, இத்துறையின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தி, மக்கள் நலனை முதன்மைப்படுத்தி நேர்மையுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆட்சியில் தனிநபர்/ ஒரு நிறுவனத்திற்கு மட்டும் மின் வாரிய முக்கிய பணிகள் - ஒப்பந்தாரர்கள் புகார். இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பணிகள் வழங்கப்படும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் உறுதி.
இன்று (25.05.2026) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மனிதவள மேலாண்மைத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை. இதில், அவர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்தார்.