TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

இயற்கை வளங்கள் துறை

சுரங்க ஒழுங்குமுறைகள், புவியியல், கனிம பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்கள் மேலாண்மை செய்திகள்.

11 ஜூன், 2026PR #215

கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பெற பல்வேறு சங்கப் பிரதிநிதிகளோடு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் கனிம கடத்தலைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

6 ஜூன், 2026PR #185

அரியலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல், கனிமவள திட்டப்பணிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கனிமவள அறக்கட்டளை நிதி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

4 ஜூன், 2026

இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

2 ஜூன், 2026

விதிமீறல்கள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட கல்குவாரிகளின் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கை மற்றும் சட்ட விரோத கல்குவாரி மற்றும் அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்லுதல் போன்றவை நடைபெறாதவண்ணம் தடுக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்த ஆய்வு.

தமிழக அரசு சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது; இயற்கை வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலும் 88 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

29 மே, 2026

கல்குவாரிகளில் விதிமீறல்: 67 தற்காலிக நிறுத்தம், 469 வாகனங்கள் பறிமுதல், சட்டவிரோத சுரங்கம் கண்டறிந்து அரசு நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 78 இடங்களில் சட்டவிரோத கனிம சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

27 மே, 2026

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராம குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு

மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் விருதுநகர் மாவட்டம், புலியூரான் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

26 மே, 2026

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டார். மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.

26 மே, 2026

விருதுநகர் மாவட்டத்தில் கனிம வள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மானகசேரி கிராமத்தில், மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு திறந்து வைத்தார். மேலும், மாவட்டத்தில் கூடுதலாக 50 அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

25 மே, 2026

தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு.

பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

22 மே, 2026

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாகவும், பல இடங்களில் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.