TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

சென்னை மாவட்டம்

மாநிலத் தலைநகரான சென்னையின் மாநகராட்சி அறிவிப்புகள், கொள்கை அமலாக்கங்கள் மற்றும் குடிமை அறிவிப்புகள் உள்ளிட்ட சமீபத்திய தகவல்கள்.

9 ஜூன், 2026PR #202

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (09.06.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைக்கும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார்.

9 ஜூன், 2026

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் அவர்கள் பேரிடர் மேலாண்மை துறையின் 2026 மாநில வெப்ப செயல் திட்டத்திற்கான புத்தகத்தை வெளியிட்டார்.

9 ஜூன், 2026

தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி'

தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் பயிற்சி'யை வரும் 15.06.2026 முதல் 19.06.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்த உள்ளது.

9 ஜூன், 2026

5 நாட்கள் மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம்

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம் சென்னை, கிண்டியில் 2026 ஜூன் 15 முதல் 19 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

9 ஜூன், 2026

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), "மின்னணு வர்த்தகம் (இ-காமர்ஸ்) குறித்த பயிற்சி"

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன (MSME) உரிமையாளர்களுக்காக ஜூன் 16 முதல் 18, 2026 வரை சென்னையில் மின்னணு வர்த்தகம் மற்றும் நேரடி வாடிக்கையாளர் விற்பனை (D2C) மாதிரிகள் குறித்த மூன்று நாள் பயிற்சியை நடத்துகிறது.

9 ஜூன், 2026

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் மூன்று நாள் 'இ-வணிகம்' பயிற்சித் திட்டம்

சென்னை, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), ஜூன் 16, 2026 முதல் ஜூன் 18, 2026 வரை அதன் சென்னை வளாகத்தில் மூன்று நாள் 'இ-வணிகம்' பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

9 ஜூன், 2026

அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவு

மாண்புமிகு அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் சேவை மேம்பாடு மற்றும் வருவாய் இலக்குகளை அடையவும் அறிவுறுத்தப்பட்டது.

9 ஜூன், 2026

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவியும் உபகரணங்களும் வழங்கினார்

மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமாருக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பில் துப்பாக்கி சுடும் உபகரணங்களும் வழங்கினார். மேலும், ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒரு விளையாட்டு வீரருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.

8 ஜூன், 2026PR #193

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

8 ஜூன், 2026PR #191

நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 இலட்சத்திற்கான காசோலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

6 ஜூன், 2026PR #189

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) வழங்கப்பட்டதால் மின்வாரிய பொறியாளர்கள் மகிழ்ச்சி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்களாக (மின்னியல்) பணியில் சேர்ந்தவர்களுக்கு, முதற்கட்டமாக 300 செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை மின்வாரிய பொறியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.