TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

சென்னை மாவட்டம்

மாநிலத் தலைநகரான சென்னையின் மாநகராட்சி அறிவிப்புகள், கொள்கை அமலாக்கங்கள் மற்றும் குடிமை அறிவிப்புகள் உள்ளிட்ட சமீபத்திய தகவல்கள்.

25 மே, 2026

கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

24 மே, 2026

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை கணினிமயமாக்க மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார்

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (24.05.2026) புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க உத்தரவிட்டதோடு, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கவும், கைதிகளுக்கான in-house bazaar அமைக்கவும் அறிவுறுத்தினார்.

24 மே, 2026

உலக கோப்பை வென்ற தமிழ்நாட்டின் ஸ்குவாஷ் வீரர்களுக்கு 2028-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை. மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தகவல்.

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை சந்தித்து, 2028 ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல தேவையான உதவிகளை வழங்குவதாக தெரிவித்தார்.

23 மே, 2026

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் சைதாப்பேட்டை - கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து வழித்தட ஆய்வு மற்றும் வேளச்சேரி பணிமனை ஆய்வு.

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் சைதாப்பேட்டை முதல் கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்தில் பயணம் செய்து பொது மக்களுடனும், ஓட்டுநர் நடத்துநர்களுடனும் கலந்துரையாடினார். மேலும், வேளச்சேரி அரசு மத்திய தானியங்கி பணிமனையை ஆய்வு செய்தார்.

23 மே, 2026

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் குறித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார். இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு விரைவான விசாரணை மற்றும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதி பூண்டுள்ளது.

23 மே, 2026

அமைச்சர் ராஜ்மோகன் 2026-27 கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்ட பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்தார்

பள்ளிக்கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன், 2026-2027 கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் புத்தகப்பைகள் விநியோகப் பணிகளை சென்னையில் ஆய்வு செய்தார். ஜூன் 1 அன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாவட்ட மையங்கள் வழியாக பள்ளிகளுக்கு நலத்திட்ட பொருட்கள் அனுப்பப்பட்டு விநியோகம் நடைபெற்று வருகிறது.

23 மே, 2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் கண் மருத்துவ உதவியாளர் 3 பணிக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மருத்துவத் துறையில் 3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 3 கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச, தேசிய அல்லது மாநில அளவிலான சீனியர் போட்டிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதனைகள் புரிந்த தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் மே 25, 2026 முதல் ஜூன் 24, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

22 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து ஆணை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.05.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

22 மே, 2026

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்து அனுப்ப நடவடிக்கை.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விளையாட்டு சங்கங்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, 2028 கோடைகால ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களை தயார்படுத்துவதற்கான முயற்சிகளை அறிவித்தார். இதில் திறமையாளர்களைக் கண்டறிதல், ஒலிம்பிக் பவன் அமைத்தல் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.

21 மே, 2026

அமைச்சர் ப.ராஜ்குமார் இராயப்பேட்டையில் வணிக வளாக கட்டுமானத்தை ஆய்வு செய்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை இராயப்பேட்டையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை 21.05.2026 அன்று ஆய்வு செய்தார்.

21 மே, 2026

ஜப்பானில் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு

ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டம் - JFY 2026 என்ற சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

21 மே, 2026

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வில் பசுமை எரிசக்தி கழகத்தின் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தெரியவந்தது. இதன் காரணமாக திரு. வி. காசி மற்றும் திரு. பி. சந்திரசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற இயக்குநர் திரு. எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.