ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டத்தின் தொழில், ஜவுளி மற்றும் விவசாய வளர்ச்சி செய்திகள் மற்றும் அறிவிப்புகள்.
"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்
உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.
டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள்
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என நிர்வாகம் உறுதியளித்த நிலையில், பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜப்பானில் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு
ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டம் - JFY 2026 என்ற சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.