மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தின் கலாச்சார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் அரசு செய்திக் குறிப்புகள்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. பிரவீன் சித்ரவேல் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, முறையே 30 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தார்.
தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நீச்சல் குளம், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களால் இன்று (23.07.2026) திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 20 கோரிக்கை மனுக்களை அளித்தார்
தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.விஜய் பாலாஜி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களை சந்தித்து, மாநிலத்தின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை மேம்பாட்டிற்கான 20 விரிவான கோரிக்கைகளை சமர்ப்பித்தார். இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ப.ராஜ்குமார் அவர்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள், நடப்பு திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்முயற்சிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.127.21 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்கலை உறுதி செய்து, திட்டங்களை விரைவுபடுத்தி மாநிலத்தின் பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திடும் வகையில் 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்
மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிர்வாக செயல்திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி, பசுமை ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த 5 புதிய மண்டலங்களை உருவாக்கியுள்ளது.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கழிவுநீர் வெளியேற்று திட்டங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த. லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து முக்கிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களை முன்மொழிந்தார்
தமிழ்நாட்டின் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்து, 2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், பல்வேறு விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையங்களை நிறுவுதல் மற்றும் மாநிலம் முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை முன்மொழிந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டை முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்துவதே நோக்கம்.