தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைந்துள்ள முன்காண் திரையரங்கில் முதன்முறையாக மன இறுக்கம் (Autism) கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (18.07.2026) தொடங்கி வைத்தார்கள்.
மன இறுக்கம் கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு, பொது இடங்களுக்குச் செல்லும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 'Finding Nemo' எனும் உயிர்பூட்டல் படம் திரையிடப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
முதலமைச்சர் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவு
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 2026-27 ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்காக 120 நாட்களுக்கு மொத்தம் 1563 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9012 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக 2,548.94 ஏக்கர் நிலங்களுக்கும், கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் வடமலையான்கால் மூலம் மேலும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கும், ஆக மொத்தம் 5,780.91 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுதில்லியில் நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு" விற்பனை நிலையத்தை பார்வையிட்ட தமிழ்நாடு அரசின் மாண்புமிகு அமைச்சர்கள்
புதுதில்லியில் ரூ.49.00 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு" விற்பனை நிலையத்தை தமிழ்நாடு அமைச்சர்கள் பார்வையிட்டு, மேம்பாட்டு வசதிகளை ஆய்வு செய்தனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடீநீர் வழங்கல் துறை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1035.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்துடன் 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தாயுமானவர் திட்டத்தில் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில், சென்னை மாநகரில் உள்ள 18 மண்டலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.
தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியலினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார்
தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியல் இன்று (01.07.2026) வெளியிடப்பட்டது.
அமைச்சர் ப.வெங்கடரமணன் மயிலாப்பூர் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நீர்நிலைப் புனரமைப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, பெருநிறுவனங்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்களிப்புடன் நீர்நிலைகளைப் புனரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை (அரசு ஆணை (நிலை) எண் 50-ன் கீழ்) இன்று (01.07.2026) வெளியிட்டார்.
கவிஞர் புவியரசு அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கவிஞரும், எழுத்தாளருமான திரு. புவியரசு அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என அறிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.