தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்த செய்தி வெளியீடு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், TNPSC, RRB, SSC போன்ற பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை ஜூன் 1 முதல் நடத்தி வருகிறது. இவற்றுள் திறமையான பயிற்றுநர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு, விரிவான பாடக்குறிப்புகள் வழங்கப்படுகின்றன.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பெற பல்வேறு சங்கப் பிரதிநிதிகளோடு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் கனிம கடத்தலைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகள் பற்றிய உரை.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் 2,090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்ட 2,090 மாணவர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் அரசு திட்டங்களின் முன்னேற்பு பணிகள் குறித்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா அவர்கள் ஆய்வு
மாண்புமிகு அமைச்சர் பெ. மதன் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், MSME திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட அதிக பயனாளிகளை அடையாளம் காணவும், மாற்றுத்திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும், அனைத்து இலக்குகளையும் டிசம்பருக்குள் அடையவும் அவர் வலியுறுத்தினார்.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், நகர் ஊரமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வரன்முறைப்படுத்துதல் குறித்த பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (09.06.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைக்கும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார்.
செய்தி வெளியீடு - சட்டமன்றப் பேரவைச் செயலகம்
2026 ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரவின் சக்கரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டு, 12 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று (08.06.2026) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு.
மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.
பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) ஆவணப்பதிவு கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு
பதிவுத்துறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை இணையவழியே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்ய 'வருகை இல்லா ஆவணப்பதிவு' முறை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) வழங்கப்பட்டதால் மின்வாரிய பொறியாளர்கள் மகிழ்ச்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்களாக (மின்னியல்) பணியில் சேர்ந்தவர்களுக்கு, முதற்கட்டமாக 300 செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை மின்வாரிய பொறியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.