TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

N Anand

N Anand தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

28 ஜூலை, 2026PR #453

அடையாறு ஆறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி: மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவுப்படி அமைச்சர் திரு.என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டம், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.

27 ஜூலை, 2026PR #450

2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் தலைமையில் சென்னையில் மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

27 ஜூலை, 2026PR #446

சென்னை மாவட்டத்தில் கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்

முதலமைச்சரின் உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்தில் பாடிக்குப்பம் அருகே கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் அருகே ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார். இது நீர் ஓட்டத்தை மேம்படுத்தி வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.

25 ஜூலை, 2026PR #444

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை 27.07.2026 அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் (27.07.2026) திங்கட்கிழமை அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கவுள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.

17 ஜூலை, 2026PR #414

தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

15 ஜூலை, 2026PR #400

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2026) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.