#Chennai
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chennai குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் சைதாப்பேட்டை - கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து வழித்தட ஆய்வு மற்றும் வேளச்சேரி பணிமனை ஆய்வு.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் சைதாப்பேட்டை முதல் கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்தில் பயணம் செய்து பொது மக்களுடனும், ஓட்டுநர் நடத்துநர்களுடனும் கலந்துரையாடினார். மேலும், வேளச்சேரி அரசு மத்திய தானியங்கி பணிமனையை ஆய்வு செய்தார்.
அமைச்சர் ப.ராஜ்குமார் இராயப்பேட்டையில் வணிக வளாக கட்டுமானத்தை ஆய்வு செய்தார்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை இராயப்பேட்டையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை 21.05.2026 அன்று ஆய்வு செய்தார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கலையரங்கம், கூட்டரங்கம், கருத்தரங்கம் மற்றும் செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள வசதிகளையும் நூலக உள்கட்டமைப்பையும் ஆய்வு செய்தார்.
விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்யவேண்டும். மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தகவல்.
அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழ்நாடு ஜூனியர் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர், விளையாட்டு வீரர்கள் உயர் கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்களை சந்திப்பார்
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிவார் என அறிவித்தார்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
சென்னை, அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், 2026-2027 கல்வியாண்டிற்கான பல்வேறு தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2026 மே 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மேலாண்மை - இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
தமிழ்நாடு தொழிலாளர் ஆய்வுகள் நிறுவனம், தொழிலாளர் மேலாண்மை இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 29.05.2026 வரை நீட்டித்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காவினை ஆய்வு மற்றும் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை அறிவிப்பு.
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் கோபாலபுரம், நுங்கம்பாக்கம் மற்றும் கில்நகர் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காவினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 'முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை' என்ற பெயரில் மூன்று நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே.இராதா நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
மாண்புமிகு அமைச்சர் திரு.ப. வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூரில் நாகேஸ்வரராவ் பூங்காவில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் திரு.ப. வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூரில் ரூ.12.22/- கோடி மதிப்பீட்டில் நடைபெறும் நாகேஸ்வரராவ் பூங்கா மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர உத்தரவிட்டார்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி "
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" 18.05.2026 முதல் 22.05.2026 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் இப்பயிற்சி நடைபெறும்.