#Education
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Education குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2026 தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026-க்கான கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சரிபார்ப்பு மற்றும் தற்காலிக சேர்க்கைக்கான முக்கிய தேதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் (தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்) 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
சென்னை, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளுக்கான வழக்கமான மாணவர் சேர்க்கையில் காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2026) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், பள்ளிக்கூடங்கள் அமைத்து கல்விக்கண் திறந்த, ஏழைப் பிள்ளைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த அவரது தியாகங்களையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கல்வி வணக்கத்தை செலுத்துகிறார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் ஆய்வு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் பள்ளி வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு நாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பெறுகின்றன.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பான சில சிக்கல்கள் குறித்த விளக்கம்
உதவிப் பேராசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வு முடிவுகள் குறித்த கவலைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தெளிவுபடுத்துகிறது, முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் விண்ணப்பதாரர்களின் தரவு உள்ளீட்டுப் பிழைகள் காரணமாக ஏற்பட்டவை என்றும், வாரியத்தால் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்றும் கூறுகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார்!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில், ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் ப.வெங்கடரமணன் மயிலாப்பூர் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு ஆய்வு செய்தார்.
மயிலாப்பூரில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ப.வெங்கடரமணன் தொடங்கி வைத்தார்
24.06.2026 அன்று மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.