#Minister
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு.
பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உலக கோப்பை வென்ற தமிழ்நாட்டின் ஸ்குவாஷ் வீரர்களுக்கு 2028-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை. மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தகவல்.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை சந்தித்து, 2028 ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல தேவையான உதவிகளை வழங்குவதாக தெரிவித்தார்.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர. வினோத் அவர்கள், அமைச்சராக பதவியேற்ற மறுநாளே வேளாண்மை இயக்குநரகத்திற்கு வருகை தந்து, துறை அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS–140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மனிதவள மேலாண்மைத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்யவேண்டும். மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தகவல்.
அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழ்நாடு ஜூனியர் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர், விளையாட்டு வீரர்கள் உயர் கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ் வளர்ச்சி, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (19.05.2026) நடைபெற்றது.
மாண்புமிகு அமைச்சர் திரு.என்.ஆனந்த் தலைமையில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம்
மாண்புமிகு அமைச்சர் திரு.என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டத்தில், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும், மக்கள் நலன் பயக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், திட்டப்பணிகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.