#Tamil Nadu
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tamil Nadu குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டின் விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், 27.05.2026 அன்று நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலிக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவியாக ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ.எம்.ஷாஜஹான் அவர்களின் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. தமிழக உறுப்பினர் கர்நாடகாவிலிருந்து பெறப்பட்ட கூடுதல் நீரை அங்கீகரிக்க மறுத்து, தமிழகத்திற்கான பங்கை பில்லிகுண்டுலுவில் உறுதி செய்ய வலியுறுத்தினார்.
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மீறுவதாகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டு மாண்புமிகு இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் தனி அனுமதி தேவையில்லை என உத்தரவிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் பயன்பெற அழைப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கிறது.
அமைச்சர் ராஜ்மோகன் 2026-27 கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்ட பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்தார்
பள்ளிக்கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன், 2026-2027 கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் புத்தகப்பைகள் விநியோகப் பணிகளை சென்னையில் ஆய்வு செய்தார். ஜூன் 1 அன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாவட்ட மையங்கள் வழியாக பள்ளிகளுக்கு நலத்திட்ட பொருட்கள் அனுப்பப்பட்டு விநியோகம் நடைபெற்று வருகிறது.
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS–140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து ஆணை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.05.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.
ஜப்பானில் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு
ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டம் - JFY 2026 என்ற சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன செயல்பாடுகள் ஆய்வு
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, பாதுகாப்பான தானிய சேமிப்பு மற்றும் முழு கொள்ளளவு பயன்பாட்டை வலியுறுத்தினார்.