உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து
நெடுஞ்சாலை திட்டங்கள், பாலங்கள், மெட்ரோ ரயில், பொது போக்குவரத்து, அரசு பேருந்து போக்குவரத்து (TNSTC) மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகள் பற்றிய உரை.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், நகர் ஊரமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வரன்முறைப்படுத்துதல் குறித்த பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று (08.06.2026) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு.
மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.
மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் தமிழக சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்தார்
தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்காரி அவர்களை சந்தித்து, மாநிலத்தின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திட்டங்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.
உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் மற்றும் மாண்புமிகு ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு.சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கையெழுத்தானது.
கோயம்புத்தூர், நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய புதிய திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு
மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்து 31.05.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளிமாநிலங்களில் தற்போது இயக்கத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "Tamil Nadu Suraksha Mitra Portal" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரம் வழங்கும் சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்.
வெளிமாநிலங்களில் இயங்கும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "தமிழ்நாடு சுரக்ஷா மித்ரா போர்ட்டல்" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரத்தைப் பெற இரண்டு வார கால தற்காலிக சிறப்பு வசதியை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம்
தமிழ்நாடு அரசு, 2026-27 கல்வியாண்டிற்கான புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, ஜூன் 4, 2026 முதல் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயணத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல், வருவாயை உயர்த்துதல் மற்றும் பேருந்துகளை நவீனமயமாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை புதுதில்லியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரினார்.