உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து
நெடுஞ்சாலை திட்டங்கள், பாலங்கள், மெட்ரோ ரயில், பொது போக்குவரத்து, அரசு பேருந்து போக்குவரத்து (TNSTC) மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு.
வெளிமாநிலங்களில் தற்போது இயக்கத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "Tamil Nadu Suraksha Mitra Portal" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரம் வழங்கும் சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்.
வெளிமாநிலங்களில் இயங்கும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "தமிழ்நாடு சுரக்ஷா மித்ரா போர்ட்டல்" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரத்தைப் பெற இரண்டு வார கால தற்காலிக சிறப்பு வசதியை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம்
தமிழ்நாடு அரசு, 2026-27 கல்வியாண்டிற்கான புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, ஜூன் 4, 2026 முதல் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயணத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல், வருவாயை உயர்த்துதல் மற்றும் பேருந்துகளை நவீனமயமாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை புதுதில்லியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 27.05.2026 அன்று நடைபெற்றது, அதில் அலுவலர்களுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டை தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடமாக உயர்த்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மற்றும் மெகா உணவு பூங்காவினை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சமச்சீரான வட்டாரத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் இன்று (26.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா மற்றும் மெகா உணவுப் பூங்காவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய 2 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நிதி உதவிக் கோரியதையொட்டி உடனடியாக ரூ. 5.80 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் வழங்கினார்கள்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் நீச்சல் வீரர் அபிஷேக் ஆகிய இருவருக்கு ரூ. 5.80 இலட்சம் நிதி உதவி காசோலைகளை இன்று (25.05.2026) சென்னை நேரு விளையாட்டரங்கில் வழங்கினார்.
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS–140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள் இன்று 22.05.2026 தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பதவியேற்பு – செய்தி வெளியீடு
மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள் இன்று 22.05.2026 அன்று பதவியேற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கான நலத்திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவிகளுக்கு ஒப்புதல் அளித்தார். இதில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், கிராம அறிவுசார் மையங்கள் அமைத்தல் மற்றும் மாணவியர் விடுதிகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.
அமைச்சர் ப.ராஜ்குமார் இராயப்பேட்டையில் வணிக வளாக கட்டுமானத்தை ஆய்வு செய்தார்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை இராயப்பேட்டையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை 21.05.2026 அன்று ஆய்வு செய்தார்.
விளையாட்டுத் துறையில் வீரர், வீராங்கனைகள் சாதனை படைக்க பொருளாதாரம் இனி ஒரு தடையாக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறியும் வகையில் திறன் ஆய்வு பிரிவு (Talent Research Wing) அமைக்க நடவடிக்கை.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின், விளையாட்டுத் துறையில் நிதித் தடைகளை நீக்குதல், திறன் ஆய்வுப் பிரிவு அமைத்தல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வீரர்களுக்கு 3% அரசு வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.