சென்னை மாவட்டம்
மாநிலத் தலைநகரான சென்னையின் மாநகராட்சி அறிவிப்புகள், கொள்கை அமலாக்கங்கள் மற்றும் குடிமை அறிவிப்புகள் உள்ளிட்ட சமீபத்திய தகவல்கள்.
அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பணிகள் மற்றும் மாவட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பல்வேறு பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும், மாவட்ட அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு அவர்கள் இன்று (12.06.2026) சென்னை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஆணையரகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் உறுதி
உலக அளவில் அனுசரிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று 12.06.2026 சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது. மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, செனாய் நகர், அம்மா அரங்கத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதி அளித்தார்.
பயிற்சித் துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் ஆய்வு
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் தலைமையில் பயிற்சித்துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அடிப்படை, பணியிடை மற்றும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பயிற்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. திறன் மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பப் பயிற்சிகள், அத்துடன் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் மூலம் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்த செய்தி வெளியீடு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், TNPSC, RRB, SSC போன்ற பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை ஜூன் 1 முதல் நடத்தி வருகிறது. இவற்றுள் திறமையான பயிற்றுநர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு, விரிவான பாடக்குறிப்புகள் வழங்கப்படுகின்றன.
கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பெற பல்வேறு சங்கப் பிரதிநிதிகளோடு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் கனிம கடத்தலைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
7.84% தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன், 2026 திரும்பச் செலுத்துதல்
தமிழ்நாடு அரசு தனது 7.84% மாநில வளர்ச்சி கடன், 2026 ஐ ஜூலை 13, 2026 அன்று திரும்பச் செலுத்தும் என்றும், வட்டி ஜூலை 12, 2026 வரை செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்"; பங்குகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, ஜூன் 26 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6 கி.மீட்டர் தூரம் நடைபெறும் 'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க 11.06.2026 முதல் 22.06.2026 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
செய்தி வெளியீடு: சட்டமன்றப் பேரவைச் செயலகம்
திரு. C.Ve. சண்முகம் ராஜினாமா செய்த வெற்றிடத்திற்கு, திரு. பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 60 திட்டப்பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 766.24 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன - மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தகவல்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 60 திட்டப்பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 766.24 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் 2,090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்ட 2,090 மாணவர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.72.03 இலட்சம் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகின்ற 13.06.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.