TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

சென்னை மாவட்டம்

மாநிலத் தலைநகரான சென்னையின் மாநகராட்சி அறிவிப்புகள், கொள்கை அமலாக்கங்கள் மற்றும் குடிமை அறிவிப்புகள் உள்ளிட்ட சமீபத்திய தகவல்கள்.

22 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து ஆணை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.05.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

22 மே, 2026

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்து அனுப்ப நடவடிக்கை.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விளையாட்டு சங்கங்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, 2028 கோடைகால ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களை தயார்படுத்துவதற்கான முயற்சிகளை அறிவித்தார். இதில் திறமையாளர்களைக் கண்டறிதல், ஒலிம்பிக் பவன் அமைத்தல் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.

21 மே, 2026

அமைச்சர் ப.ராஜ்குமார் இராயப்பேட்டையில் வணிக வளாக கட்டுமானத்தை ஆய்வு செய்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை இராயப்பேட்டையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை 21.05.2026 அன்று ஆய்வு செய்தார்.

21 மே, 2026

ஜப்பானில் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு

ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டம் - JFY 2026 என்ற சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

21 மே, 2026

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வில் பசுமை எரிசக்தி கழகத்தின் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தெரியவந்தது. இதன் காரணமாக திரு. வி. காசி மற்றும் திரு. பி. சந்திரசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற இயக்குநர் திரு. எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

20 மே, 2026

விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்யவேண்டும். மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தகவல்.

அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழ்நாடு ஜூனியர் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர், விளையாட்டு வீரர்கள் உயர் கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

20 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

20 மே, 2026

விளையாட்டுத் துறை அமைச்சர் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்களை சந்திப்பார்

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிவார் என அறிவித்தார்.

19 மே, 2026

தமிழ் வளர்ச்சி, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (19.05.2026) நடைபெற்றது.

19 மே, 2026

தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தின் கீழ் மனநல ஆலோசனைக்காக 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேவை பெறலாம்.

18 மே, 2026

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், அம்மா உணவகங்களில் உணவுத் தரம் குறித்து வந்த புகார்களை அடுத்து, உணவகங்களை புதுப்பித்து, தரமான உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார்.