TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயம், கலை, பாரம்பரியம் மற்றும் மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்புகள்.

17 ஜூலை, 2026PR #414

தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

14 ஜூலை, 2026PR #391

தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 20 கோரிக்கை மனுக்களை அளித்தார்

தமிழ்நாடு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.விஜய் பாலாஜி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களை சந்தித்து, மாநிலத்தின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை மேம்பாட்டிற்கான 20 விரிவான கோரிக்கைகளை சமர்ப்பித்தார். இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

9 ஜூலை, 2026PR #371

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் திருமதி சின்னபொண்ணு (வயது 55) என்பவர் உயிரிழந்தார். இவ்விபத்தில் காயமடைந்த திருமதி சகுந்தலா (வயது 25) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

30 ஜூன், 2026PR #314

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

19 ஜூன், 2026PR #259

தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்கலை உறுதி செய்து, திட்டங்களை விரைவுபடுத்தி மாநிலத்தின் பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திடும் வகையில் 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்

மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிர்வாக செயல்திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி, பசுமை ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த 5 புதிய மண்டலங்களை உருவாக்கியுள்ளது.

12 ஜூன், 2026PR #218

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

6 ஜூன், 2026PR #186

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் திரு.ர.வினோத் ஆய்வு செய்தார்.

மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் 06.06.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், முழலை கிராமத்தில் அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

5 ஜூன், 2026PR #178

இரங்கல் செய்தி

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் ஆழத்தினை அதிகப்படுத்தும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு நரசிங்க பேட்டை கிராமத்தை சார்ந்த திரு.ரா.பாலு அவர்கள் உயிரிழந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

29 மே, 2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை – அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (Five Years Integrated P.G. M.A. in Tamil) மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு (M.A. Tamil) ஆகிய படிப்புகளுக்கான 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

29 மே, 2026

புதுதில்லியில் காரீஃப் முகாம் 2026, தேசிய வேளாண் மாநாட்டில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர். வினோத் அவர்கள் ஆற்றிய உரை

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வேளாண் மாநாடு - காரீஃப் முகாம் 2026-இல், தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர். வினோத் அவர்கள் உரையாற்றி, மத்திய அரசிடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

29 மே, 2026

தேசிய காரீஃப் சாகுபடிப் பரப்பு விரிவாக்கக் கருத்தரங்கம் – 2026 மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.வினோத் அவர்களின் உரை

தமிழ்நாட்டின் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.வினோத், 2026 காரீஃப் சாகுபடிப் பரப்பு விரிவாக்கத்திற்கான தேசிய கருத்தரங்கில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். விதை மானியங்கள், பண்ணை இயந்திரமயமாக்கலுக்கான நிதி, உர விலைக் கட்டுப்பாடு மற்றும் ஒரு துளி ஒரு பயிர் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசின் ஆதரவைக் கோரினார்.