TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயம், கலை, பாரம்பரியம் மற்றும் மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்புகள்.

12 ஜூன், 2026PR #218

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

6 ஜூன், 2026PR #186

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் திரு.ர.வினோத் ஆய்வு செய்தார்.

மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் 06.06.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், முழலை கிராமத்தில் அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

5 ஜூன், 2026PR #178

இரங்கல் செய்தி

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் ஆழத்தினை அதிகப்படுத்தும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு நரசிங்க பேட்டை கிராமத்தை சார்ந்த திரு.ரா.பாலு அவர்கள் உயிரிழந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

29 மே, 2026

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை – அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (Five Years Integrated P.G. M.A. in Tamil) மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு (M.A. Tamil) ஆகிய படிப்புகளுக்கான 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

29 மே, 2026

புதுதில்லியில் காரீஃப் முகாம் 2026, தேசிய வேளாண் மாநாட்டில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர். வினோத் அவர்கள் ஆற்றிய உரை

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வேளாண் மாநாடு - காரீஃப் முகாம் 2026-இல், தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர். வினோத் அவர்கள் உரையாற்றி, மத்திய அரசிடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

29 மே, 2026

தேசிய காரீஃப் சாகுபடிப் பரப்பு விரிவாக்கக் கருத்தரங்கம் – 2026 மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.வினோத் அவர்களின் உரை

தமிழ்நாட்டின் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.வினோத், 2026 காரீஃப் சாகுபடிப் பரப்பு விரிவாக்கத்திற்கான தேசிய கருத்தரங்கில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். விதை மானியங்கள், பண்ணை இயந்திரமயமாக்கலுக்கான நிதி, உர விலைக் கட்டுப்பாடு மற்றும் ஒரு துளி ஒரு பயிர் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசின் ஆதரவைக் கோரினார்.

25 மே, 2026

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் மாநகரப் போக்குவரத்து கழகம் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பை காணாமல் போனது மற்றும் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தாமல் சென்றது குறித்த இரண்டு பொதுமக்கள் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன், விழுப்புரம் பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டார்.

19 மே, 2026

தமிழ் வளர்ச்சி, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (19.05.2026) நடைபெற்றது.

19 மே, 2026

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், புதுப்பட்டினம் கிராமம் சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று குளிரூட்டி (Air conditioner) பழுது செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தனியார் உணவகத்தில் ஏசி பழுதுபார்க்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹3 லட்சம், கடுமையான காயமடைந்த நான்கு பேருக்கு தலா ₹1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்த ஒருவருக்கு ₹50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.

12 மே, 2026

2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை - அறிவிப்பு

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2026-27 கல்வியாண்டிற்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தமிழ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அறிவிக்கிறது, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச விடுதி வசதிகளுடன்.