TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்ட பட்டாசுத் தொழில் செய்திகள், சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் அரசு அறிவிப்புகள்.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

2 ஜூன், 2026

விதிமீறல்கள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட கல்குவாரிகளின் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கை மற்றும் சட்ட விரோத கல்குவாரி மற்றும் அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்லுதல் போன்றவை நடைபெறாதவண்ணம் தடுக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்த ஆய்வு.

தமிழக அரசு சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது; இயற்கை வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலும் 88 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

29 மே, 2026

கல்குவாரிகளில் விதிமீறல்: 67 தற்காலிக நிறுத்தம், 469 வாகனங்கள் பறிமுதல், சட்டவிரோத சுரங்கம் கண்டறிந்து அரசு நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 78 இடங்களில் சட்டவிரோத கனிம சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

27 மே, 2026

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராம குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு

மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் விருதுநகர் மாவட்டம், புலியூரான் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

26 மே, 2026

டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள்

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என நிர்வாகம் உறுதியளித்த நிலையில், பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26 மே, 2026

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டார். மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.

26 மே, 2026

விருதுநகர் மாவட்டத்தில் கனிம வள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மானகசேரி கிராமத்தில், மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு திறந்து வைத்தார். மேலும், மாவட்டத்தில் கூடுதலாக 50 அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

18 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

12 மே, 2026

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.