TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Welfare

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Welfare குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

21 ஆக., 2026PR #570

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் தாய்க்கும் தங்க மோதிரம் வழங்கப்படும்.

17 ஆக., 2026

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்.

16 ஆக., 2026PR #546

சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து உயிரிழந்த முதல்நிலைக் காவலர் திரு.A.தர்மராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் தெரிவித்து, முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

6 ஆக., 2026PR #502

2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த அமைச்சர்கள் திரு. நெ. மரிய வில்சன் மற்றும் திரு. ர. வினோத் ஆகியோரைப் பாராட்டி முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் மற்றும் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

4 ஆக., 2026PR #495

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்ய அமைக்கப்பட்ட மாநில மன்றத்தின் முதல் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026-27ஆம் நிதியாண்டிற்கான மேம்பாட்டுச் செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், நிதியானது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், திட்டத்தின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

30 ஜூலை, 2026PR #467

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணை, 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.14.13 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ்அர்ஜுனா அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

10 ஜூலை, 2026PR #374

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனங்களை வழங்கினார்.

24 ஜூன், 2026PR #283

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருதுகளுக்கான விண்ணப்பக் காலக்கெடு நீட்டிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 15, 2026 அன்று மாண்புமிகு முதலமைச்சரால் வழங்கப்படும் மாநில விருதுகளுக்கான விண்ணப்ப கடைசி தேதி 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

26 மே, 2026

விருதுநகர் மாவட்டத்தில் கனிம வள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மானகசேரி கிராமத்தில், மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு திறந்து வைத்தார். மேலும், மாவட்டத்தில் கூடுதலாக 50 அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

25 மே, 2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் பயன்பெற அழைப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கிறது.

14 மே, 2026

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 01.01.2026 முதல் 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.