கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு பள்ளி கல்வி, உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள், TNPSC தேர்வுகள், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள்.
பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன், மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer) விரைவான சேவை வழங்கப்படும் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு
பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer) வழங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் HRD Attestation மற்றும் Apostille சேவைகள்; பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL), மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோருக்கான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான HRD Attestation மற்றும் Apostille சேவைகளை வழங்குகிறது. நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக இச்சேவைகளைப் பெற பொதுமக்கள் நேரடியாக OMCL-ஐ அணுகி இடைத்தரகர்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2026) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், பள்ளிக்கூடங்கள் அமைத்து கல்விக்கண் திறந்த, ஏழைப் பிள்ளைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த அவரது தியாகங்களையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கல்வி வணக்கத்தை செலுத்துகிறார்.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 2026-27 ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வில் (General Counselling) கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் - மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பெ. விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு
உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 2026-27ஆம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் ஆய்வு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் பள்ளி வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு நாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பெறுகின்றன.
2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான BNYS (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான BNYS (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவப் பட்டப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரி இடங்களுக்கு வரவேற்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நடத்திய 'எதிர்கால பொறியியல் பாடத்திட்டம் - பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்' [Future of Engineering Curriculum – Enhancing Graduate Employability'] கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்
உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நடத்திய 'எதிர்கால பொறியியல் பாடத்திட்டம் - பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்' குறித்த கருத்தரங்கினை தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில் பாடத்திட்ட மேம்பாடு, பல்துறை கற்றல், புதுமைத்திறன், தொழில்முனைவோர் மற்றும் திறனடைவு சார்ந்த கல்வி குறித்து விவாதிக்கப்பட்டு, பரிந்துரைகள் தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.